ஃபேஸ்புக் நிறுவனம், கனடா நாட்டின் தனியுரிமை விதிமீறலில் ஈடுபட்டதாக அந்நாட்டு தனியுரிமை ஆணையர் குற்றம் சாட்டி உள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் கனடா நாட்டு விதிகளை மீறியதாக சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்கும் தனியுரிமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கனடா நாட்டு தனியுரிமை ஆணையர் மற்றும் பிரிட்டிஷ், கொலம்பியாவின் தனியுரிமை ஆணையர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதற்கு பயனரிடம் இருந்து அனுமதி பெறவில்லை. பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கு எவ்வித பொறுப்பையும் ஏற்கவில்லை" என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடாவின் தனியுரிமை ஆணையர் டேனியல் தெரியன், "ஃபேஸ்புக் கையாளும் அதிகப்படியான பயனர் விவரங்களை பாதுகாப்பதில் அந்நிறுவனம் கவனம் செலுத்தாது தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக்கின் தனியுரிமை கட்டமைப்பு காலியாகவே இருக்கிறது. அதன் விதிகள் தனியுரிமை பாதுகாப்பிற்கு அர்த்தமற்றதாக மாற்றுகிறது" என்று தெரிவித்தார்.